கோவை ஸ்டேன்ஸ் பள்ளிக்கு 3-வது முறையாக தொடரும் வெடிகுண்டு மிரட்டல்..!

கோவை அவிநாசி ரோட்டில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு ஏராளமான மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள் . இந்த பள்ளிக்கூடத்துக்கு ஏற்கனவே 2 தடவை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உடனே வெடிகுண்டு கண்டுபிடிப்புநிபுணர்கள், துப்பறியும் நாயுடன் சென்று சோதனை நடத்தினார்கள் அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது .இந்த நிலையில் நேற்று 3-வது முறையாக “இ’மெயில் ” மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து தகவல்அறிந்ததும் போலீசார் பள்ளிக்கூடத்துக்கு சென்று சோதனை நடத்தினார்கள். இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது யார்? என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்