தெரு நாயை அடித்து கொன்ற 4 பேர் கைது.!!

கோவை சிங்காநல்லூர் சவுரி பாளையம் ரோட்டில் உள்ள ராஜா நகர் 3 – வது வீதியில் வசிப்பவர் அமிர்தராஜ். இவரது வீட்டின் அருகே யாரோ தெரு நாயை அடித்து கொலை செய்து வீசி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மிருகவதைதடுப்பு பிரிவில் புகார் செய்யப்பட்டது. அதன் அமைப்பாளர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் குரளரசன் வழக்கு பதிவு செய்து சின்ன வேடம்பட்டி சிந்து நகரை சேர்ந்த வேடியப்பன் (வயது 46) மற்றொரு வேடியப்பன் (வயது 38)மாதேஷ் ( வயது 19) ரத்தினபுரி கண்ணப்பன் நகர், அருள் நகர் செல்வராஜ் (வயது 48 ) ஆகியோரை கைது செய்தார். இவர்கள் மீது மிருகவதை தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.