கஞ்சா, போதை பொருளுடன் 4 பேர் கைது – கார், பைக் பறிமுதல்.!!

கோவை கரும்பு கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் நேற்று மாலை அங்குள்ள புட்டு விக்கி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகபடும்
படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 250 கிராம் கஞ்சா, ஒரு கிராம் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கரும்புக்கடை காந்திநகர் மெயின் ரோட்டை சேர்ந்த நியாசுதின் அஹமத் என்ற சின்னா (வயது 29) தெற்கு உக்கடம், பிலால் நகரை சேர்ந்த முகமத் அஜ்மல் (வயது 26) காளப்பட்டி, பாலாஜி நகரை சேர்ந்த கோகுல் (வயது 28) பொள்ளாச்சி கோட்டூர் மலையாண்டி பட்டினத்தைச் சேர்ந்த யாதவன் ( வயது 21) என்பது தெரிய வந்தது . இவர்களிடம் இருந்து ஒரு கார், ஒரு பைக் ,ஒரு ஸ்கூட்டர், 4 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..