ஒரே நாளில் மாணவி உட்பட 4 பேர் தூக்கிட்டு தற்கொலை..

கோவையில் நேற்று ஒரே நாளில் மாணவி உட்பட 4 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது . அதன் விவரம் வருமாறு:- நீலகிரி மாவட்டம் , லவ்டேலை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகள் கனகவல்லி (வயது 19) கோவை பாப்பநாயக்கன்பாளையம், நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள பாலிடெக்னிக்கில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இவர் தங்கி இருந்த வீட்டில் மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல வேலாண்டிபாளையம், மருத கோனார் வீதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் வினோத்குமார் ( வயது 24 ) கால்டாக்சி டிரைவர். இவர் நேற்று அவரது வீட்டில் மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சாய்பாபா காலணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரத்தினபுரி,பெரியசாமி லேஅவுட்டில் வசிப்பவர் பழனிசாமி. இவரது மனைவி கோகிலா (வயது 38 )குடும்பத் தகராறு காரணமாக நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை குனியமுத்தூர் சுண்டக்கா முத்தூர் ரோடு, திருநகர் காலனி சேர்ந்தவர் பரமசிவம் இவரது மகன் ஹரிஷ் குமார் ( வயது 19 )நேற்று இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம்  சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தாயார் அர்ச்சனா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..