விபசார விடுதி நடத்திய பெண்கள் உள்பட 4 பேர் கைது..!

கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர் ,தென்றல் நகர்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போத்தனூர் திருமால் நகரை சேர்ந்த அப்துல் அஜீஸ் (வயது 25) தென்றல் நகர் ஜிந்து செபாஸ்டின் (வயது31) திருப்பூர் மாவட்டம் ( நம்பியூர்) மணிமேகலை ( வயது 32) திருப்பூர், புதூர் பிரிவு மாதேஸ்வரி ( வயது 33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..