கோவையில் ஒரே நாளில் சாலை விபத்தில் 4 பேர் பரிதாப பலி..

கோவை துடியலூர் வெள்ளை கிணறு பிரிவு ,வி.சி.எஸ் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். ( வயது74 )நேற்று இவர் துடியலூர் வெள்ளக்கிணறு ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வந்த பைக் இவர் மீது மோதியது .இதில சுப்பிரமணியம் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார் இது தொடர்பாக மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பைக் ஓட்டி வந்த வடமதுரை அண்ணா நகரை சேர்ந்த மகேந்திரன் ( வயது 60) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் .

இதே போல வெள்ளலூர், ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இ வரது மகன் கோபி கிருஷ்ணன் (வயது 26 )இவர் நேற்று உக்கடம் சுங்கம் மேம்பால பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைத்தடுமாறி  கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார்.

கோவை சுந்தராபுரம் மாச்சம் பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் ( வயது 55) இவர் நேற்று பொள்ளாச்சி ரோட்டில் பாசஞ்சர் ஆட்டோ ஒட்டி சென்று கொண்டிருந்தார். குறிச்சி பிரிவு அருகே சென்றபோது திடீரென்று நிலைத்தடுமாறி  ஆட்டோ ரோட்டில் கவிழ்ந்தது இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார்.

இதேபோல கோவை சவுரிபாளையம், மீனா எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் ( வயது 36) இவர் நேற்று திருச்சி ரோடு ராமநாதபுரம் சந்திப்பில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த  வழியாக வேகமாக வந்த தனியார் டவுன் பஸ் அவர் மீது மோதியது. இதில் பிரவீன் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பஸ் டிரைவரான சுந்தராபுரம் ,அன்னை இந்திரா நகரை சேர்ந்த பிரவீன் குமார் (வயது 24) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.. கோவையில் ஒரே நாளில் சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.