ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 4 பவுன் செயின் அபேஸ்..!

கோவை கவுண்டம்பாளையம் வெங்கடேஸ்வரன் நகர் முதல் வீதியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி இந்துமதி (வயது 57) இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார் . சாய்பாபா காலனி காவல் நிலையம் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கினார்.. அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை காணவில்லை. யாரோ பஸ்சில் வைத்து திருடி விட்டனர். இதுகுறித்து இந்துமதி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.