ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4 பவுன் செயின் திருட்டு.!!

கோவை துடியலூர் பக்கம் உள்ள சுப்பிரமணியம்பாளையம்,விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் காளி சாமி. இவரது மனைவி வசந்தாமணி ( வயது 58) இவர் நேற்று ஜி.என்.மில் பஸ் ஸ்டாப்பில் இருந்து டவுன் பஸ்சில் பயணம் செய்தார் ..ஆர் .எஸ் . புரம், பூ மார்க்கெட்டில் இறங்கும் போது இவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை காணவில்லை .யாரோ ஓடும் பஸ்சில் திருடிவிட்டனர்.இது குறித்த வசந்தாமணி ஆர். எஸ் .புரம் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர்செல்லதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.