கோவையில் ஒரே நாளில் 4 மாணவர்கள் மாயம்..!

கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள இடையர்பாளையம், கோவில் மேடு பகுதியை சேர்ந்த 13 வயது மாணவர்கள் 2 பேரும் ,15 வயது மாணவர்கள் 2 பேரும் நேற்று முன் தினம் திடீரென்று மாயமாகிவிட்டனர். விசாரணையில் இவர்கள் சரிவர படிக்காததை பெற்றோர்கள் கண்டித்ததால் மாயமானது தெரிய வந்தது. இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..