ஒரே நாளில் 4 இளம் பெண்கள் திடீர் மாயம்.!!

கோவை வெள்ளலூர் அருகே உள்ள சித்தண்ணபுரம் ரயில்வே காலனியை சேர்ந்தவர் அகமத் . இவரது மகள்கள் அப்ரின் (வயது 15) அம்ரின் ( வயது 13) இருவரும் 9-ஆம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று காலையில் வீட்டில் எதுவும் சொல்லாமல் வெளியே சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டன இதுகுறித்து அவரது தாயார் ஆயிஷா போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..

இதே போல கோவை புதூர் அண்ணா சதுக்கம், அறிவொளி நகரை சேர்ந்தவர் சாகுல் அமீது . இவரது மகள் மதீனா (வயது 16) கோல்டு கவரிங் கடையில் வேலை பார்த்து வந்தார். இவரும் நேற்று திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.குனியமுத்தூர் ,காளியப்ப கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் மகாலட்சுமி (வயது 14) 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று இவர் வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார். இது குறித்து தாயார் வள்ளி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..