முன்னாள் தபால் அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை, பணம் திருட்டு – கோவையில் துணிகரம்.!!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சக்கர மணி கவுண்டன் புதூர் , பழனி ஆண்டவர் நகரை சேர்ந்தவர் துரைசாமி ( வயது 73 ) இவர் தபால் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது மனைவி ராஜாமணி இவர்களுக்கு கோகிலா ராம் என்ற மகள் உள்ளார். சம்பவத்தன்று துரைசாமி தனது மனைவி, மகளுடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று விட்டார்.மறுநாள் வீட்டுக்கு திரும்பினார்கள். வீட்டில் வந்து பார்த்தபோது முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், ரூ.3 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் .மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள் .இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.