வேனில் கடத்தி வந்த 458 கிலோ குட்கா பறிமுதல் – 2 பேர் கைது..!

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர்செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் ஆகியோர் நேற்று பீளமேடு,காந்தி மாநகர் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே ரோத்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு வந்த 4 சக்கர வாகனத்தை தடுத்து சோதனை செய்தனர். அதில்458 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக இதை கடத்தி வந்த வி.கே. ரோடு, ஏ .டி . காலனியை சேர்ந்த ராம்குமார் (வயது 34) ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சர்வன் கிரி (வயது 29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முகேஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார். இவர்களிடமிருந்து ஒரு வேனும், ஒரு மொபட்டும் , 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.