சூலூரில் 460 கிலோ குட்கா பறிமுதல் – 2 பேர் கைது..!

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் சூலூர் போலீசார் பாப்பம்பட்டி பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள வாடகை வீட்டில் 460 கிலோ எடை கொண்ட குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது .இதன் மதிப்பு ரூ 3 லட்சம் இருக்கும். இது தொடர்பாக தூத்துக்குடிமாவட்டத்தை சேர்ந்த ஜெயபால் மகன் சிவசுப்பிரமணியம்(44 ) மற்றும் தங்கப்பாண்டி மகன் முருகராஜ் (வயது 47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..