முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு – கோவையில் 4,810 பேர் எழுதினர்.!!

அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம். டி, எம். எஸ் .முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களை கொண்டு நிரப்பப்படுகிறது .20 24- 25 ஆம் கல்வி ஆண்டு முதல் நிலை மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. கோவை சரவணம்பட்டி, துடியலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி உள்பட 12 மையங்களில் காலை ,மாலை என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை 4,810 பேர் எழுதினார்கள்.