திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு – தொடரும் உயிர் பலி..

திருச்சி உறையூர் வாத்துக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் இவர் நேற்று தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் திருவானைக்காவல் செக் போஸ்ட் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றார். அப்போது கார்த்திகேயனின் ஐந்து வயது மகள் சரோஜினி சன்மதி கரையில் நின்று உள்ளார். திடீரென்று அவர் தண்ணீரில் இறங்கியதை குடும்பத்தினர் கவனிக்கவில்லை. இதில் அவள் ஆற்றுக்குள் மூழ்கி பரிதாபமாக இறந்தால் இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களிடம் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது பொதுமக்கள் யாரும் அதில் குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியும் மீண்டும் மீண்டும் பொது மக்கள் அங்கே உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். பல முறை சொல்லியும் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி கடந்த இரண்டு மாதத்தில் நான்கு பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..