கொலை முயற்சி வழக்கில் கைதானவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை..!

கோவை : கேரள மாநிலம் பாலக்காடு, மீனாட்சிபுரம் பக்கம் உள்ள குஞ்சு மேனம் பதியச் சேர்ந்தவர் காளியப்பன் . இவரது மகன் விஜயன் ( வயது 34) இவரை 19-11-14 அன்று ஆனைமலை மீனாட்சிபுரம் விற்பனை வரி அலுவலகம் அருகே வைத்து மீனாட்சிபுரம் மஞ்சன் காலனியை சேர்ந்த துரையன் என்ற துரைசாமி ( வயது 50) என்பவர் அரிவாளால் வெட்டினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் விவேகானந்தர் வழக்கு பதிவு செய்து துரையன் என்ற துரைசாமியை கைது செய்தார். இவர் மீது கொலை முயற்சி உட்பட இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி ராஜலிங்கம்  குற்றம் சாட்டப்பட்ட துரையன் என்ற துரைசாமிக்கு 5-ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமர் ஆஜராகி வாதாடினார்.