12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதானவருக்கு 5 ஆண்டு ஜெயில்..!

கோவை மதுக்கரை அருகே உள்ள சீராபாளையம், எஸ். எஸ். நகரை சேர்ந்தவர் சவுக்கத் அலி (வயது 57 )இவர் 2021 ஆம் ஆண்டு 12வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மதுக்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டார். இவர் மீது போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கைவிசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சவுக்கத் அலிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். ,