50 பவுன் நகை, ரூ.10 லட்சம் பணம் வரதட்சணையாக கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் – கணவர் , மாமனார், மாமியார் உட்பட 4 பேர் மீது வழக்கு.!!

கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், முத்து நகரை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி கிரண் ஸ்ரீ (வயது 28) இவர்களுக்கு 11 -2 -20 24 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 50 பவுன் நகை வரதட்சணையாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் மேலும் 50 பவுன் நகையும், ரூ 10 லட்சம் பணமும் வரதட்சணையாக வாங்கி வருமாறு கூறி கிரன்ஸ்ரீயை அவரது கணவர், மாமியார், மாமனார், கொழுந்தனார் ஆகியோர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து கிரண் ஸ்ரீ கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் விசாரணை நடத்தி கணவர் பிரவீன், மாமனார் சத்தியநாராயணன், மாமியார் விஜயலட்சுமி, , உறவினர் பிரீத்தம் ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை ,கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..