கோயம்புத்தூர் மத்திய புலனாய்வு பிரிவு குழுவினரால் கோயம்புத்தூர் சூலூரில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த 5145 லிட்டர் எரிசாராயம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கோயம்புத்தூர் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான குழு, கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் தர்கா அருகே ஒரு லாரியை வழிமறித்து சோதனை செய்தபோது 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 215 வெள்ளை நிற கேனில், 7525 லிட்டர் எரிசாராயம் கடத்தி வரப்பட்டத்தை கண்டுபிடித்தனர். லாரி மற்றும் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இரண்டு ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போதைய விசாரணையில், இந்த எரிசாராயம் கர்நாடகா மாநிலம் தார்வடத்திலிருந்து பாலக்காடு கேரளாவுக்கு கடத்தி வரப்பட்டது உறுதிப்படுத்தியுள்ளது. இந்த எரிசாராயம் கள்ளில் கலக்கும் நோக்கத்துடன் கடத்தி வரப்பட்டதாக தெரிய வருகிறது. இந்த செயல்பாட்டின் முக்கிய மூளையாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுபானத்தை கடத்த உதவிய லாரி ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.