வேனில் கடத்தி வந்த 53 கிலோ குட்கா பறிமுதல் – வியாபாரி கைது..!

கோவை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் சம்பவம் இடமான மாக்கினாம்பட்டி பிரிவு அருகே வாகன சோதன செய்தனர். அப்போது நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் முகமது அபிதீன்(வயது 51) என்பவரை கைது செய்தனர். அவரிமிருந்து 52.674 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்யபட்டது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..