மாஜி அரசு ஊழியர் வீட்டில் 58 பவுன் தங்க,வைர நகைகள் திருட்டு.!!

கோவை சின்னியம்பாளையம் பக்கம் உள்ள தொட்டிபாளையம் கே. ஜி. எஸ். கார்டனைச் சேர்ந்தவர் குமாரசாமி ( வயது 71 )அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் . இவர் கடந்த 6-ந் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் காங்கேயத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றிருந்தார். இரவில் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 58 தங்க -வைர நகைகள், பணம் ரூ 6, 500 ஆகியவை கொள்ளையடிக்கபட்டு இருந்தது. இது குறித்து குமாரசாமி பீளமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தமிழரசு, சப் இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.