விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றுவது போல் நடித்து 7 பவுன் தங்க செயின் திருட்டு..!

கோவையில் உள்ள சீரநாயக்கன்பாளையம்,பாரதியார் வீதியைச் சேர்ந்தவர் திவ்ய காந்த். இவரது மனைவி பிரதீபா (வயது 34) இவர் வடகோவையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.இவர் மருதமலை ரோட்டில் வாகனத்தில் வரும்போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரை சிகிச்சைக்காக ஆட்டோவில் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ,அப்போது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் எடை கொண்ட 2 தங்க செயின்களை காணவில்லை. யாரோ காப்பாற்றுவது போல நடித்து திருடி சென்று விட்டனர்..இது குறித்து பிரதீபா சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..