கோவையில் இருந்து 70 வழக்கறிஞர்கள் இன்று டெல்லி பயணம்.!!

கோவை ஜூலை 26சுதந்திரமான வாழ்க்கைக்கு எதிரான 3 சமஸ்கிருத சட்டங்களை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் சங்கங்களின் நடவடிக்கை குழு ( ஜெ.ஏ.ஏ.சி) சார்பில் டெல்லியில் நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் சுதீஷ் தலைமையில் 70 வழக்கறிஞர்கள் இன்று காலையில் கோவை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர். சில வழக்கறிஞர்கள் விமானம் மூலம் டெல்லி செல்கிறார்கள்..