கோவை தொழில் அதிபர் வீட்டில் 70 பவுன் நகை, 15 கிலோ வெள்ளி கொள்ளை.!!

கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள இடையர்பாளையம், பாரிநகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 70) தொழிலதிபர் .இவர் கடந்த 12ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூருக்கு தொழில் நிமித்தமாக சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார் . அப்போது வீட்டில் இருந்த 70 பவுன் நகைகள்,15 கிலோ வெள்ளி பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர் . அவரது வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது குமார், சுரேஷ் உட்பட சிலர் இந்த திருட்டை நடத்தியது தெரிய வந்தது. இது குறித்து நாகராஜன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார் .சப் இன்ஸ்பெக்டர் தீபா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..