திருநின்றவூர் ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்..!

ஆவடியை அடுத்த திருநின்றவூர் ரயில் நிலையத்தில் 25 கிலோ எடை கொண்ட 8 மூட்டை ரேஷன் அரிசி 2 வது பிளாட்பார்மில் சாரதா வயது 50 என்ற பெண்மணி 200 கிலோ ரேஷன் அரிசியை வைத்துக் கொண்டு ரயிலுக்காக நின்று கொண்டிருந்தார். இது பற்றிய தகவல் அறிந்த ரயில்வே போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணன் நேரடி மேற்பார்வையில் திருவள்ளூர் சிவில் சப்ளை சிஐடி சிறப்பு உதவி ஆய்வாளர் குமார் திருவள்ளூர் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் ரேஷன் அரிசியை கடத்திய குற்றவாளி சாரதா வயது 50. கணவர் பெயர் சிவலிங்கம். விநாயகர் கோவில் தெரு புத்தூர் ஆந்திர மாநிலம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.