ஓடும் பேருந்தில் பயணியிடம் 8 பவுன் நகை திருட்டு..!

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, பழனிச்சாமி நகரைச் சேர்ந்தவர் தங்கவேல் ( வயது 54 )இவர் காரைக்குடியில் இருந்து அரசுபஸ்சில் கோவை வந்தார். உக்கடம் பஸ் நிலையத்தில் இறங்கி நின்ற போது அவரது கையில் அணிந்திருந்த 7 பவுன் கைசெயினை காணவில்லை.ஓடும் பஸ்சில் இவர் தூங்கும் போது யாரோ திருடி விட்டனர். இதுகுறித்து தங்கவேல் உக்கடம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.