8 ஆண்டுகள் பணி செய்த வீட்டிலலேயே நகை, பணம் திருட்டு – வேலைக்கார பெண் கைது..!

கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம், ஜி.சி.டி .நகரை சேர்ந்தவர் விவேக். இவரது மனைவி சந்தியா (வயது 34) இவரது வீட்டில் இடையர்பாளையம், தடாகம் ரோடு, டி.வி.எஸ். நகரை சேர்ந்த குமரகுரு மனைவி ராஜேஸ்வரி ( வயது 38 )என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்தார் .கடந்த 29ஆம் தேதி சந்தியா உறவினர் வீட்டு நிகழ்ச்சி கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்று விட்டு 30ஆம் தேதி திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த 2 நகைகள் பணம் ரூ.16 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து சந்தியா வடவள்ளி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அதே வீட்டில் வேலை செய்து வந்த ராஜேஸ்வரியை நேற்று கைது செய்தார்.இவரிடம் இருந்து நகை மீட்கப்பட்டது.மேலும் விசாரணை நடந்து வருகிறது..