சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 86-ஆவது பட்டமளிப்பு விழா..!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 86-ஆவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அவ்விழாவில் முன்னாள் அமைச்சர், கோயமுத்தூர் மாவட்ட மேயர் செ.ம. வேலுசாமிக்கு முனைவர் பட்டத்தையும் வாங்கினார் .இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலை வேந்தருமான ஆர்.என்.ரவி. உடன் பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக உயா்கல்வித் துறை அமைச்சருமான கோவி.செழியன், மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம், தேசிய காச நோய் ஒழிப்புத் திட்ட முதன்மை ஆலோசகா் மருத்துவா் சௌமியா சுவாமிநாதன், துணைவேந்தர் ராம.கதிரேசன், பதிவாளர் எம்.பிரகாஷ். ஆகியோர் உடன் இருந்தனர் .பட்டம் பெற்ற செ.ம. வேலுச்சாமி அவர்கள் பட்டம் பெற்ற சான்றிதழை அ இ அ தி மு க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றார்..