கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரையும் சென்னை அழைத்துச் சென்ற என்.ஐ.ஏ அதிகாரிகள்..!

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் காருக்குள் இருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். தொடர்ந்து அவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்து வெடிப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக முகமது ஆசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முஹம்மது தவ்பீக், உமர் பாரூக், சேக் இதயத்துல்லா, சனாபர் அலி, பெரோஸ்கான் ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர்களின் 6 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். அதில் உயிரிழந்த ஜமேஷா முபின் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ரகசிய கூட்டம் நடத்திய கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அது தொடர்பாக விசாரணை நடத்த ஆறு பேரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து விசாரணை நடத்தியினார்கள். அதில் முகமது ரியாஸ், முகமது தவ்பீக், முகமது நவாஸ் உட்பட 4 பேரை ஜமேஷா முபின் வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதேபோன்று ஜமேஷா முபின் சத்தியமங்கலம் வனப் பகுதியில் நடத்திய கூட்டத்தில் சனாபர் அலி, ஷேக் இதயத்துல்லா உள்பட பலர் பங்கேற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் இரண்டு பேரையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சத்தியமங்கலம் வனப் பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்பொழுது அங்குள்ள ஆசனூர், கடம்பூர் வனப் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து ரகசிய கூட்டம் நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இரண்டு பேரையும் அந்த பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டம் நடத்தப்பட்ட இடம். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.