குன்னூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் திடீர் ரெய்டு – ரூ.1.27 லட்சம் பணம் பறிமுதல்..!

நீலகிரி மாவட்டம், குன்னூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் ரூ. 1.27 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.  குன்னூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை மாவட்ட துணைக் கண்காணிப்பாளா் ஜெயகுமாா் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
இதில் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. 5 மணி நேரமாக தொடா்ந்து விசாரணை நடைபெற்றது. இந்த சோதனையின் போது சாா் பதிவாளா் ஷீபாவிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை நடத்தினா்..