வேலை செய்து வீட்டில் நகை, பணம் திருடிய 2 பெயிண்டர்கள் கைது..!

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள மேற்கு சுகுணாபுரம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகராஜன் ( வயது 50) எலக்ட்ரிக்கல் பேனல் போர்டு தொழில் செய்து வருகிறார் . இவரது வீட்டில் செல்வபுரத்தைச் சேர்ந்த 2 பேர் பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த தங்க கம்மல், வெள்ளி கொலுசு, பித்தளைக் குடம், கட்டிங் மெஷின் பணம் ரூ 6,500 ஆகியவற்றை காணவில்லை. இவர்கள் 2 பேரும் நைசாக திருடி விட்டனர். இது குறித்து நாகராஜன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பெயிண்டர்களை கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் செல்வபுரம் அசோக் நகர் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்ற சஞ்சய் (வயது 26) ராஜேஸ்வரி நகரை சேர்ந்த சூர்யா ( வயது 24 )என்பது தெரியவந்தது .நகை , பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..