திருப்பூரை தலைமை இடமாகக் கொண்ட பாசி போரக்ஸ் டிரேடிங் என்ற ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனம் பொதுமக்கள் அளிக்கும் முதலீட்டு பணத்திற்கு 40 சதவீதம் வரை வட்டி தரப்படும் என்று அறிவித்தது. இதை நம்பிய ஏராளமான பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இவ்வாறு பொதுமக்கள் முதலீடு செய்த தொகை திருப்பி தரப்படவில்லை. இது குறித்து புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 58 ஆயிரம் பேரிடம் ரூபாய் 930 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இந்நிலையில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான கோவை விளாங்குறிச்சியில் 4,352 சதுர அடியில் வீடு உள்ளது. இந்த வீடு வருகிற 18-ஆம் தேதி மாவட்ட வருவாய் அலுவலர்கள் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஏலம் விடப்பட உள்ளது. இந்த தகவலை மாவட்ட வருவாய் அலுவலர் லீனா அலெக்ஸ் தெரிவித்து உள்ளார்
ரூ. 930 கோடி மோசடி.. பாசி நிறுவன சொத்துக்கள் ஏலம் – மாவட்ட வருவாய் அலுவலர் லீனா அலெக்ஸ் அறிவிப்பு..!
