கோவையில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு சீருடையில் அணியும் நவீன கேமராக்கள்.!!

கோவை போலீசார் வழக்கு விசாரணை ,ரோந்து, போக்குவரத்து சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள். இது போன்ற நேரங்களில் சிலர் போலீசார் தங்களை தாக்கியதாகவோ அல்லது லஞ்சம் கேட்பதாக புகார் அளிக்கின்றனர். இதனால் போலீசார் தேவையில்லாத பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். எனவே போலீசாருக்கு சீருடையில்அணியும் கேமரா ( பாடி கேமரா) வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவை மாவட்டபோலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசாருக்கு சீருடையில் அணியும் கேமராக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது இதில் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்து கொண்டு 51 போலீசாருக்கு சீருடை கேமராக்கள் வழங்கினார்.இதுகுறித்து கோவை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:- டி .ஜி. பி. சைலேந்திரபாபு உத்தரவின் பெயரில் கோவை ஊரக பகுதியில் போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு வழங்க 51 சீருடை கேமராக்கள் வாங்கப்பட்டது. அதை போக்குவரத்து சீரமைப்பு ரோந்து புகார் மனு மீது விசாரணையின் போது போலீசார் சீருடையில் அணிந்திருக்க வேண்டும். அப்போது அவரது விசாரணை வீடியோவில் பதிவாகும் .கேமராக்கள் பயன்படுத்தும் விதம் பற்றி போலீசாருக்கு தெளிவாக கூறப்பட்டுள்ளது. இது தவிர காவலன் செயலி உட்பட போலீசார் துறை சார்ந்த செயலிகள் அடங்கிய கையடக்க கணினி ( டேப்லெட்) போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.