பிரபல வழிப்பறி கொள்ளையன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ரமேஷ் ( வயது 45) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.. இவர் கடந்த மாதம் 11ஆம் தேதி தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் பழைய நகராட்சி அலுவலக ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார் .அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாலன் என்பவரது மகன் சூர்யா (வயது 21 )என்பவர் கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்தார் ..இது குறித்து ரமேஷ் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்து கோவை மத்தியசிறையில் அடைத்தனர். இவர் மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளது. எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன்,மாவட்ட கலெக்டர் கிராந்தி குமாருக்கு பரிந்துரை செய்தார். அவர் சூர்யாவைகுண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதை யடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் சூர்யாவை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்தனர். .இதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூர்யாவுக்கு நேற்று வழங்கப்பட்டது..