மாடியில் நின்று மாங்காய் பறித்த 2 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்..

கோவை ரத்தினபுரி ,மருதகுட்டி வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் .இவரது மகன் கவுதம் (வயது11) காளியப்பா வீதியைச் சேர்ந்தவர் ஜான் ஜோஸ். அவரது மகன் ஸ்ரீஹரிஸ் ( வயது 9) இவர்கள் இருவரும் நேற்று பழனியம்மாள் வீதியில் உள்ள ஸ்ரீஹரிஸ் வீட்டின் மாடியில் நின்று மாங்காய் பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக மின் வயரில் கை பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இருவரும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஸ்ரீ ஹரிஷ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..