கோவை பீளமேடு சின்கர்நகரை சேர்ந்தவர்கிஷோர் குமார். இவரது மகள் வர்ஷினி ஸ்ரீ( வயது 12).பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று. “ஜாக்கிங் ” சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகி விட்டார் .இது குறித்து அவரது தாயார் சத்யா கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள் .இதேபோல போத்தனூர் குமரன் நகரை சேர்ந்தவர் அப்துல் கலாம் ஆஷாத். இவரது மகள் சுலேகா பீவி (வயது 15) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளிக்கூடம் சென்றவர் வீடு திரும்பவில்லை இது குறித்து அவர் தாயார் தஸ்லீம் பானு போத்தனூர் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
Leave a Reply