தோட்டத்தில் பணம் வைத்து சீட்டாட்டம்- 8 பேர் கைது..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள கனியூரில் ஒரு தனியார் தோட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கருமத்தம்பட்டி போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வாகராயம்பாளையம் கோடுல் பிரசாத் ( 23 ) திருப்பூர் ஜனார்த்தனன் (41) முப்பரிபாளையம் அங்கமுத்து( 26 ) கணபதிபாளையம் மாரியப்பன் ( 32) ஆறுச்சாமி (62) வாகராயம்பாளையம் தண்டபாணி ( 52) மணிராஜ் ( 30) கார்த்திக் ( 35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ. 32 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது.