வீடு, கார் கண்ணாடி உடைப்பு – கால்பந்து பயிற்சியாளர் கைது..!

பொள்ளாச்சி பக்கம் உள்ள ஆச்சி பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47)இன்டர்நெட் இணைப்பு தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சேர்ந்த சின்னதுரை ( வயது 31) என்பவருக்கும் பணம்- கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று சின்னதுரை முருகேசன் வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் கண்ணாடியையும், அவரது வீட்டு ஜன்னல் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினாராம். இதை தட்டிக் கேட்ட முருகேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து முருகேசன் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்கு பதிவு செய்து சின்னதுரையை நேற்று கைது செய்தார். இவர் கால்பந்து பயிற்சியாளராக உள்ளார் .இவர் மீது கொலை மிரட்டல், சேதப்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.