மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 56-ம் ஆண்டு மிலாது விழா -தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி துவக்கம்.!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 56 ஆண்டுகளாக
வருடம் தோறும் மீலாது விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டும் முகமது நபியின் 1498 ஆம் ஆண்டு பிறந்தநாள் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் மிலாது திடலில் இரவு 8.45 முதல் 12 மணி வரை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பங்குபெறும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியும் மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் உள்ள மதரஸா பள்ளி மாணவ மாணவிகளுக்கு வருகின்ற 24.09.2023 ஞாயிறு அன்று காலை 9 மணி முதல் சூரா மனப்பாடப்போட்டி, கேள்வி பதில் மனப்பாடப் போட்டி
இஸ்லாமிய ஷாரியத்சட்டம் குறித்தும் மேலும் பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கும் முதல் மூன்று இடங்கள் பெரும் கல்வி நிறுவனங்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது. நிலாது விழாவை முன்னிட்டு வசதியற்ற ஏழை சிறுவர்களுக்கு இலவசமாக சுன்னத் என்னும் கத்னா செய்து வைக்கப்படுகிறது.

இதில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை முஸ்லிம் லீக் அலுவலகம் அலிஃப் ஜல்வா ஜாமிலா புர்கா கடை ஸ்ரீதேவி தங்க மாளிகையில் விண்ணப்பங்களை கொடுக்குமாறு முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர். மேலும் 28. 9 .2023 தேதி அனைத்து மதரசா மாணவ மாணவிகள் பங்குபெறும் மிலாது விழா ஊர்வலம் காலை 9 மணிக்கு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது..