வீடு வாடகைக்கு கேட்பது போல நடித்துபெண்களிடம் நகை- பணம் கொள்ளை.

கோவை  சித்தாபுதூர், ஆவாரம் பாளையம் புதியவர் நகரை சேர்ந்தவர் முரளிதரன், இவரது மனைவி கோமளம் ( வயது 64) இவருடைய கணவரும், மகனும் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டனர். இந்த நிலையில் கோமளம் தனது கணவரின் சகோதரர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று கோமளமும்,அவரது கணவரின் சகோதரர் மனைவி அனிதாவும் வரண்டாவிலிருந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 பேர் வீடு வாடகைக்கு உள்ளதா? என்று கேட்டனர் .அவர்கள் இல்லை என்று கூறினார்கள். அப்போது கண்ணிமைக்க நேரத்தில் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்து 13 பவுன் நகைகளையும் வீட்டிலிருந்த ரு12 ஆயிரத்தையும் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து கோமளம் காட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ண லீலா ,சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து கன்னியாகுமரி மாவட்டம் ,கோட்டார் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் விக்னேஸ்வரன் ( வயது 27 )பெருமாள் மகன் சதீஷ் (வயது 21) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து நகை- பணம் மீட்க்கப்பட்டது.மேலும் விசாரணை நடந்து வருகிறது.