மருத்துவமனை படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி சாவு .

மயிலாடுதுறை பகுதியைசேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மனைவி ராஜ சுலோச்சனா (வயது 68). இவரது கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கோவை ஆர் எஸ்.புரம் வெங்கட கிருஷ்ணா ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு துணையாக அவரது மனைவி ராஜசுலோசனா இருந்து வந்தார். நேற்று இவர் மருத்துவமனை படிக்கட்டில் ஏறும்போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்தார் .இது குறித்து ஆர் ..எஸ். புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.