6 ஆயிரத்து 400 கிராம் தங்க கட்டிகளை கொள்ளையடித்த நகை பட்டறை ஊழியர்கள் கைது

சென்னை தியாகராய நகர் ராமேஸ்வரம் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் வயது 45 தங்க நகைகளை உற்பத்தி செய்யும் பட்டறை நடத்தி வருகிறார் இவரிடத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது பட்டறையில் உருக்கிய தங்க கட்டிகள் 6400 கிராம் திடீரென காணாமல் போய்விட்டது ஊழியர்களும் காணாமல் போய்விட்டனர் இதுகுறித்து நந்தகுமார் மாம்பலம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு நடத்தினர் சி சி டிவி கேமராவை ஓபன் செய்து பார்த்தனர் அதில் மகாராஷ்டிரா மாநில ஊழியர்கள் தங்க கட்டிகளை திருடியது அம்பலமாகியது இந்த சம்பவத்தில் போலீஸ் இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி கிடு க்கிப்பிடி போட்டு கைது செய்ய உத்தரவு பிறப்பி த்தார் அதன் பேரில் குற்றவாளிகளை மகாராஷ்டிரா சென்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.