துணி காய போடும்போது மின்சாரம் தாக்கி பெண் சாவு.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி பார்வதி (வயது 43) இவர் நேற்று அவரதுவீட்டில் டியூப் லைட் கட்டப்பட்டுள்ள இரும்பு கம்பியில் துணிகளை துவைத்து காய போட்டார் .அப்போது அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை சிகிச்சைக்காககோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து கணவர் தங்கராஜ் கோட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.