கத்தியால் குத்தி தொழிலாளி படு கொலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50) இவர் கடந்த 2 ஆண்டுகளாக பெரியநாயக்கன்பாளையம் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.நேற்று காலையில் சிவக்குமார் கழுத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சிவக்குமார் நேற்று முன் தினம் இரவு குடிபோதையில் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் தகராறு செய்துள்ளார். காலையில் பார்த்த போது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவரை கொலை செய்தது யார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்துபெரியநாயக்கன்பாளையம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துகொலையாளியை தேடி வருகிறார்கள்.