கோவையில் தொழிலாளி அடித்துக் கொலை….

கோவை சிங்காநல்லூர் ஆனையங்காடு வீதியைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 40) கூலிதொழிலாளி. இவர் நேற்று இரத்த காயத்துடன் வீட்டில் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது தலை மற்றும் கன்னத்தில் காயம் இருந்தது தெரியவந்தது இதனால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம்என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து போலீசார் பாக்யராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கொலையான பாக்யராஜ் குடிபோதையில் இருந்துள்ளார். அவரது மனைவியும் குடிபோதையில் தான் இருந்துள்ளார். அவருடைய தலை கன்னம் ஆகியவற்றில் பலத்த காயம் இருந்தது எனவே அவரை அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து தகவல் தெரியவில்லை இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.