தனியார் நிறுவனத்தில் பணம் வைத்து சீட்டாட்டம். 16 பேர் கைது…

கோவை பாப்பநாயக்கன்பாளையம், தனலட்சுமி நகரில் உள்ள ஸ்ரீ காவியா வாட்டர் சப்ளை நிறுவன வளாகத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு நேற்று மாலைதகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று அங்கு சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக பொள்ளாச்சி ரமணிபுதூரை சேர்ந்த சதீஷ்குமார் (48) வெரைட்டிஹால் ரோடு முகமது உமர் (38) கோவில் மேடு கந்தன் (51) ஜி. என். மில் வெங்கடேசன் (40) தில்லைநகர் சரவணகுமார் (40) போத்தனூர் சித்தன் ( 36 ) சந்திரசேகர் ( 38 ) பொள்ளாச்சி உதயகுமார் (57) தாராபுரம் குணசேகர் ( 48) தென் குமாரபாளையம் சக்திவேல்( 45 ) உக்கடம் ஜாபர் அலி ( 67 )ராம்நகர் வீரையன் ( 36 ) சரவணம்பட்டி சுந்தர் ( 52) ரத்தினபுரி ரவிக்குமார் (40) வெள்ளலூர் உதயகுமார் ( 51 ) சித்தாபுதூர் மகேந்திரன் ( 42 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ 47 ஆயிரத்து 280 பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.