டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக மதுவிற்ற 2ஊழியர் கைது.

கோவை காட்டூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி நேற்று ராம் நகர் காளிங்கராயன் வீதியில்ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை (என்15 74) அருகே உள்ள பாரில் காலை 8-30 மணிக்கு மது விற்பனை ஜோராக நடந்தது தெரியவந்தது. ‘இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்த பார் ஊழியர் செல்வராஜ் ( வயது 58) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 29 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.பார் உரிமையாளர் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதே போல துடியலூர் பக்கம் உள்ள வெள்ளக்கிணறு டாஸ்மாக் கடை (எண் 1648) அருகே சட்ட விரோதமாக மது விற்றதாக தேனி மாவட்டம் ,ஆண்டிப்பட்டி தங்கம்மாள் புரத்தைச் சேர்ந்த ஆண்டவர் ( வயது 43) கைது செய்யப்பட்டார் இவரிடமிருந்து 23 மது பாட்டில்களும் மதுவிற்ற பணம் ரூ. 1990 பறிமுதல் செய்யப்பட்டது .தெய்வம் என்பவர் தப்பி ஓடிவிட்டார்.