தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 1வயதுகுழந்தை பரிதாப சாவு…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள கோமங்கலம், பீக்கால்பட்டியைச் சேர்ந்தவர் தண்டீஸ்வரன் (வயது 27 )கூலி தொழிலாளி. இவரது ஒருவயது கைக்குழந்தை ரிஸ்வந்திக்கா,நேற்றுவீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது.அப்போது திடீரென்று திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது.பாத்ரூம் சென்று இருந்த தாய் வந்து பார்க்கும்போது குழந்தையை காணவில்லை. தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தபோது குழந்தை கிடந்தது உடனடியாக மட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.