போதை மாத்திரை விற்பனை.கோவை மாணவர் கைது…

கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே நேற்று மாலைரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு மாணவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 60போதை மாத்திரைகள்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாக அந்தமாணவர்கைது செய்யப்பட்டார் .விசாரணையில் அவர் பீளமேடு,டி. கே. நாயுடு வீதியைச் சேர்ந்த தனகோடி மகன் ஹரி பிரசாத் (வயது 20)என்பது தெரிய வந்தது.இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..