மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து, திறந்து வைத்தார்…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து, திறந்து வைத்தார் அவினாசி சாலை ஆடிஸ் வீதியில் உள்ள அறிவுசார் மையத்தில், கீழ்கண்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

1.ஆடிஸ் வீதி அறிவுசார் மையம்

2. உக்கடம் பெரியகுளம் மேற்கு கரையில் அமைந்துள்ள அனுபவ மையம்

3. குறிச்சி குளக்கரையில் புனரமைத்தல் பணியில் ஒரு அங்கமாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் கிழக்கு குளக்கரையில் அமைந்துள்ள தமிழர் பாரம்பரிய சிலைகள்.

இந்நிகழ்வில், கோவை‌ மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி,கோவை‌ மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் பங்கேற்றனர்.

கோவை‌ மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., பங்கேற்றார்.

கோவை‌ மாநகராட்சி மண்டலத்‌ தலைவர்கள்,நிலைக்குழுத் தலைவர்கள், பகுதிச் செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், வட்டக்கழகச் செயலாளர்கள், அரசு அதிகாரிகள்,கோவை‌ மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள்,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.